Wednesday, September 14, 2011

பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி

ஒரு பார்வையில்
ஓராயிரம் பரிமாறல்கள்

உன் உதடுகளின் ஈரத்தில்
என் மனதுக்கு ஆறுதல்

உன் கை தொட்ட நேரத்தில்
என் இதயத்தில் ஜில்லிப்பு

காதோரம் கொடுத்த முத்தத்தில்
என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி

நீ நிலவாக சுட்டாய்
நான் சூரியனாக குளிர்ந்தேன்

நேரம் போவதும் தெரியவில்லை
நேசம் உயர்ந்ததும் தெரியவில்லை

பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்...

No comments:

Post a Comment