THEEJAGA
Labels
கவிதைகள்
(29)
Book of Love
(28)
வாழ்க்கை - தெரிந்து கொள்ளுங்கள்
(15)
லைப் ஸ்டைல்
(12)
Monday, August 8, 2011
மவுனம் பேசியதே
என்னென்னவோ
பேச எண்ணிய
என் உதடு
உன்னைக் கண்டதும்
மவுன மானது !
ஆனால்
மவுனமாய் இருந்த
என் விழிகள்
உன்னிடம்
பேச ஆரம்பித்தது !
நெருக்கடி
வளையல்,
கொலுசை கழற்றி
வைத்தபின்
சாந்தி முகூர்த்தம்....
கூட்டு குடும்பம் !!!
Thursday, August 4, 2011
அழியாத கோலங்கள்
உன் வீட்டு
முற்றத்தில்..
நித்தம் நித்தம்
நீ அழித்து
கோலமிட்டாலும்
என் இதய
மாடத்தில்
அழிவதில்லை
உன் கோலம் !
அன்பு மழை
என் உயிரே,
மேகத்தை காட்டிலும் நீ
மிகச் சிறந்தவள் !
அன்பை மழையாய் பொழிவதில் !!
காதல் மின்னல்
மின்னலை பார்த்தால்
கண்கள் போய் விடுமாம்
எனக்கு இதயம்
போய் விட்டது
உன் கண்களில் தெறித்த
காதல் மின்னலை
பார்த்ததால் !
ஆறுதல்
என் காதலை
மறுத்து
எனை காயப்படுத்தினாலும்,
அவ்வப்பொழுது
மருந்து போடுகிறது
உன் பார்வை !
கிறுக்கல்
இப்போழுதும்
இனிமையாகவே
இருக்கிறது...
எப்போதோ
எழுதி கிறுக்கிய
என் பழைய
நோட்டு புத்தகத்திற்குள்
உன் பெயர் !
காதல் வலி
என் உயிரே,
சூரியன் சுட்டு
எரித்ததையும்
நெடுந்தொலைவை
கணநேரத்தில்
கடந்ததையும்
காலில் முள் தைத்து
வலித்ததையும்
சற்றும் உணர முடியவில்லை !
நீ காத்திருப்பதாக
கூரிய
அந்த இடத்தை
அடையும் வரை !!
பதினாறு செல்வங்கள்
1.
கல்வி
2.
அறிவு
3.
ஆயுள்
4.
ஆற்றல்
5.
இளமை
6.
துணிவு
7.
பெருமை
8.
பொன்
9.
பொருள்
10.
புகழ்
11.
நிலம்
12.
நன்மக்கள்
13.
நல்லொழுக்கம்
14.
நோயின்மை
15.
முயற்சி
16.
வெற்றி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)