Friday, July 15, 2011

கொல்லாமல் கொல்கிறாய் …!

கண்களை மூடினால்
கனவில் வருகிறாய்….

விழித்துப் பார்த்தால்
எதிரில் நிற்கிறாய்…

பூக்களில் நீயே
புன்னகைக்கிறாய்…

ஒவ்வொரு அணுவிலும்
ஒட்டிக்கொள்கிறாய்…

தொட்டுப்பேசினால்
எட்டிப்போகிறாய்….

தொடாமல் போனால்
வாடிப்போகின்றாய்….

எனைக் கொல்லாமல் கொன்று
நீ இம்சிக்கிறாய் ….

எதிரி என்று உன்னை
எதிர்த்து நிற்கவா?
தோழி என்று
உன் தோளில் சாயவா?

No comments:

Post a Comment