ஓயாமல் அலைகள்
வந்து தாக்கினாலும்
கரையின்
நிலையில் நான் !
மலையை
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலையாய்
என் உணர்வுகளை
எரிந்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவு !
நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள் !
நீ வரும் வழியில்
நின்றால்
பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்
விரைவுப் பெருந்தாய் !
உனது
போக்கிற்கான
காரணங்களுக்கு
விடை காண முடியாமல்
தவிக்கிறது
என் இதயத் துடிப்பு !
பெண்ணே
மதிவேல்லுமாம்
இங்கே
மதியை வென்ற வரலாறு
உனக்கு மட்டுமே உண்டு !
No comments:
Post a Comment