Tuesday, July 5, 2011

கரையும் ஆயுள்

ஓயாமல் அலைகள்
வந்து தாக்கினாலும்
கரையின்
நிலையில் நான் !

மலையை
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலையாய்
என் உணர்வுகளை
எரிந்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவு !

நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள் !

நீ வரும் வழியில்
நின்றால்
பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்
விரைவுப் பெருந்தாய் !

உனது
போக்கிற்கான
காரணங்களுக்கு
விடை காண முடியாமல்
தவிக்கிறது
என் இதயத் துடிப்பு !

பெண்ணே
மதிவேல்லுமாம்
இங்கே
மதியை வென்ற வரலாறு
உனக்கு மட்டுமே உண்டு !

No comments:

Post a Comment